இடம் : சென்னை அரசு மருத்துவமனை நேரம் : இரவு 11 மணிக்கு அம்மா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரம். இரவு உணவு முடித்து மருத்துவமனை வளாகத்தில் நடமாடிக் கொண்டு இருந்தேன். இரவு 11 மணிக்கு மேல் சென்னை பெருநகரம் தன் ஆரவாரங்கள் அனைத்தும் அடங்கி அமைதி மூச்சினை சுவாசிக்கத் தொடங்கி சாலை விளக்குகள் மற்றும் போக்குவரத்து விளக்குகள் விட்டு விட்டு எரிந்து கொண்டிருக்க சாலைகளில் ஒன்றிரண்டு வாகனங்கள் மட்டும் பயணித்துக் கொண்டிருந்தது. மருத்துவமனை உள்ளே ஆம்புலன்ஸ் ஊர்தி சைரன் அலறியபடி வந்து அதில் இருந்து ஒரு நபரை ஸ்ட்ரெச்சரில் அவசரமாக தள்ளிக் கொண்டு விரைந்தனர். அந்தக் காட்சி கண்ணில் இருந்து மறைவதற்குள் பிணவரை வாசலில் ஒரு இளம்பெண் கதறி அழுதபடி அமர்ந்திருக்க அவளைச் சுற்றி ஒரு ஒன்றிரண்டு பேர் நின்றிருந்தார்கள். பின்பு அவர்களும் கலைந்து செல்ல மேலும் இரண்டு பேர் தனியாக அழுதுகொண்டிருந்த அந்த பெண்ணிடம் விவரம் கேட்டு விட்டு வந்தனர். அவர்கள் பேசிக் கொண்டதை கேட்டபோது அந்தப் பெண் சமீபத்தில் தான் பெற்றோரை எதிர்த்து...